இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.
பொருளாதாரம், கல்வி, ஊடகம் மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தானதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மேலும் சீனாவிற்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.