புதியவன்.
ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக் குழுவினால் இலஞ்ச ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு "நேர்மையான தேசத்தை நோக்கி" என்ற இலக்குடன் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணை குழுவினால் விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் பிரகடனப்படுத்தபட்டுள்ளன.
அதனடிப்படையில், "நேர்மையான தேசத்தை நோக்கி" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் இலஞ்ச, ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு செயற்பாடுகள் கடந்த 04.12.2023ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் ஓர்அங்கமாக நேற்று(05) பொது மக்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம், ஊழல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மேலும், இலஞ்ச ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக வாயில், கிளைகளில் மற்றும் ஒன்றுகூடல் பகுதியில் உள்ள அலுவலக சுவரில் விழிப்புணர்வுப் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.