(ஆதவன்)
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பானகமுவவிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர் ஒருவர் தனது கோழிகளுக்கு குறித்த இலவச அரியை உட்கொள்ள வழங்கியுள்ள நிலையில் 7 கோழிகள் உயிரிழந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த அரிசியை உட்கொண்டதால் தான் கோழிகள் உயிரிழந்துள்ளனவா என்பது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இது தொடர்பில் மேலதிக சோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் றம்பட கல்ல நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். அதையடுத்து அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச அரிசி தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று றம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.