கிளிநொச்சி, தர்மபுரத்தில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், தர்மபுரத்தில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.