நிசாம் காரியப்பர் எம்.பி. தெரிவிப்பு!
உயிர்த்தஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய, இந்தத் தகவலை வெளிப்படுத்துவதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்நிலை நியமனக் குழுவில், உயிர்த்தஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் தான் கேள்வி எழுப்பியதாகவும், இதன்போதே, பிரதான குற்றவாளியைக் கண்டறிந்த தகவல் தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.