அமெரிக்க மாநிலங்களில் துரிதஉணவு உணவகமான மெக்டொனால்ட்டுடன் தொடர்புடைய “ஈ-கோலை” உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துடன் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அமரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் தொற்று கடந்த செப்டம்பரில் ஆரம்பமாகி இதுவரையில் 10 மேற்கு மாநிலங்களில் குறைந்தது 49 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொலராடோ மற்றும் நெப்ராஸ்காவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு அயோவா, கன்சாஸ், மிசோரி, மொன்டானா, ஓரிகான், உட்டா, விஸ்கான்சின் மற்றும் வயோமிங் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்று பரவலுக்கு காரணமான பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிய துரித உணவு உணவகம் புலனாய்வாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இத்தொற்று நிலைமை காரணமாக நியூயோர்க் பங்குச் சந்தையில் மெக்டொனால்டின் பங்குகள் சுமார் 9% சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.