அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூவிற்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காஷா போர்நிறுத்தம் தொடர்பில் இதன்போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. காஷாவில் உடனடி போர்நிறுத்தம் தேவையெனவும் இதனூடாக பலஸ்தினத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதியின் பதவியேற்புக்கு முன்னர் காஷாவில் இடம்பெறும் தாக்குதல்களை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் அமுலுக்கு வரவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.