பொதுமக்களுக்கு அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தத்துடன் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நீண்டகாலமாக வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய, வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதி, பூங்கா வீதி ஆகியவற்றில் பொலிஸால் நேற்று விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போதே, அந்த மோட்டார்சைக்கிள்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு, பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மோட்டார்சைக்கிள்களைச் செலுத்தியோருக்கு எதிராக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.