2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.
அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் எனவும்
இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்திலும் பாகிஸ்தான் 144வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (163வது இடத்தில்) ரஷ்யா இடம்பெற்றுள்ளது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.