ஐ.பி.எல் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. பெங்களூரின் ஆரம்ப வீரர்களாக ஷோல்ட் மற்றும் கோலி இருவரும் களமிறங்கினார்கள். 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் ஷோல்ட். விராட் கோலியும், மயங்க் அகர்வாலும் சிறப்பான இணைப்பாட்டத்தை அமைத்தனர். ஆனால், மிகவும் மந்தமாகவே இன்னிங்ஸ் நகர்ந்து சென்றது. 24 ஓட்டங்களுடன் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். விராட் கோலியும் 43 ஓட்டங்களுடன் வீழந்தார். இந்த 43 ஓட்டங்களுக்காக அவர் 35 பந்துகளை எதிர்கொண்டார். படிதார். லிவிங்ஸ் ரன். ஜிதேஷ் சர்மா மூவரும் முறையே 26, 25, 24 ஓட்டங்களைப் பெற்று அணியைப் பலப்படுத்த, முடிவில் 190 ஓட்டங்களை பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி பெற்றது. அர்ஷ்டீப் சிங், ஜெமிஷன் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.
பதிலுக்குக் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்ப வீரர்கள் இருவருமே மந்தமான ஆட்டத்தை வழங்கினார்கள். பிரியான்ஸ் ஆர்யா 19 பந்துகளில் 24 ஓட்டங்களையும், பிரப்சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த மந்தமான ஆரம்பம் பஞ்சாப் அணியை இதிவரை பாதித்தது. பஞ்சாப் அணியின் பெரும் துடுப்பாட்டப் பலமான ஸ்ரேயஷ் ஐயர் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, வெற்றிக்காற்று பெங்களூரின் பக்கம் வீசத் தொடங்கியது.
நிஹல் வெதேரா 18 பந்துகளை எதிர்கொண்டு 15 ஓட்டங்களைப் பெற்றார். அவரின் இந்த மந்தமான இன்னிங்ஸ் பஞ்சாப்பின் தோல்வியை உறுதிசெய்யும் படியாக அமைந்தது. இறுதி ஓவரில் 29 ஓட்டங்கள்வெற்றிக்குத் தேவை என்ற நிலையில், 22 ஓட்டங்களை விளாசினார் ஷஷான் சிங். இதையடுத்து 6 ஓட் டங்களால் வெற்றிபெற்று. 18ஆவது ஐ.பி.எல்.தொடரில் பெங்களூர் சம்பியனானது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.