மோடியை வலியுறுத்தியது காங்கிரஸ்!
(ஆதவன்)
இந்திய மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது, கச்சதீவு விவகாரம் தொடர்பில் தேவையற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்திய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் உள்ள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக மோடி கச்சதீவு விவகாரத்தில் எல்லைமீறிய கருத்துகளை முன்வைத்தார். அத்துடன், பொறுப்பற்ற அறிக்கைகளையும் பாரதிய ஜனதாக்கட்சி முன்வைத்தது. இதனால் இலங்கை -இந்தியா இடையிலான உறவில் விரிசலும் பின்னடைவும் வரும் என்றும் இந்திய காங்கிரஸ்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டு நாடுகள் தொடர்பான தகவல்களை வெளியிடும்போது கண்ணியத்துடனும், இருதரப்பு உறவுகளுக்குப் பங்கம் ஏற்படாத வகையிலும் தான் செயற்படவேண்டும். இதை பா.ஜ.க. வினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இந்திய காங்கிரஸ் கட்சி மேலும் தெரிவித்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.