திவுலபிட்டிய நகருக்கு அருகில் 7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும்
சந்தேக நபர்கள் இந்த கஜமுத்துக்களை 2 கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் கைதான நபர்களிடமிருந்து சுமார் 13 கிராம் 5 மில்லிகிராம் நிறையுடைய 7 கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 33 வயதுடைய மாத்தளை மற்றும் மஹாவெல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டும் வருகின்றனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.