நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பல நாள் மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற நிலையில் திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.