(புதியவன்)
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டைகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் குடிவரவுப் பணிமனை கோரிக்கை விடுத்துள்ளது.
பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வந்தால் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தால் அந்த புகைப்படத்துக்கு இப்போதுள்ள தோற்றத்துக்கும் பல மாற்றங்கள் காணப்படும் எனத் தெரிவித்த அவர் அதன் காரணமாக பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அதனால் தான் தாம் தெளிவான அடையாள அட்டைகளை கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை பெறவுள்ள நபர் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள தற்போது தேசிய அடையாள அட்டை முறைமை பயன்படுத்தப்படுவதாகவும், 2025 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிரல் ரேகை முறைமையே முதலிடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.