(ஆதவன்)
நெடுங்கேணியில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் வாகனம் வீட்டுக்குள் புகுந்தது. இந்தச் சம்பவம் நெடுங்கேணி நகரில் நேற்று மாலை இடம்பெற்றது. முல்லைத்தீவு - புளியங்குளம் தலைமை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியது.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகிலுள்ள கொட்டகையில் 40 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் தெய்வாதீனமாகத் தப்பித்துள்ளனர். வீடு பகுதியளவில் சேதமடைந்ததுடன் நெடுங்கேணி பொலிஸார் வாகனமும் சேதமடைந்துள்ளது.
விபத்துத் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.