கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;
நேற்று செவ்வாய்க்கிழமை(30) கண்டாவளை கொம்படி அம்மன் கோவிலுக்கு முன்பாக கடற்கரையோரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளரால் தர்மபும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் குறித்த பகுதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்டதால் சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸாரால் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராசா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மருதங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரும் இன்றையதினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் சிறுவர்கள் என்பதனல் அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.