கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகர்த்த மருத்துவமனையின் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை கடற்கரை வீதி, அல்-புஸ்ரா ஆழ்கடல் மீனவர் சங்க காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் தர முகாமைத்துவ மருத்துவ அதிகாரியும், பதில்மருத்துவ அத்தியட்சகருமான ஏ.ஆர்.எம்.ஹாரிஸ், பொது சுகாதாரப் பிரிவு மற்றும் திட்டமிடல் பிரிவு மருத்துவ அதிகாரி ஏ.எல். பாறூக் ஆகியோருடன் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ரீ. மருதராஜன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்முனை கிளை தலைவர் மெளலவி முர்ஷித் முப்தி ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இங்கு அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.