தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையின் பல்வேறு தேவைகள் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் சில பிரிவிற்கான இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு துரித கதியில் அவற்றை திருத்தியமைக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் மருத்துவமனையின் சுற்றுச் சூழலையும் அதிகாரிகளுடன் சென்று நிலைமைகளை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமானுடன் சென்று பார்வையிட்டார்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினருக்கு மருத்துவ அத்தியட்சகர் மருத்துவமனையில் செயற்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி திட்ட வரைபுகளுடனான முன்மொழிவை நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தினார்
மேலும் இதன் போது குறித்த மருத்துவமனையின் புதிய கட்டட நிர்மாணங்களை பார்வையிட்ட அவர், மருத்துவமனையின் அபிவிருத்திக்கு பல மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவ்விடத்தில் உறுதியளித்தார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமையும் பார்வையிட்டார்.
பின்னர் அங்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுகமக்களிடம் சிநேகபூர்வமாக உரையாடி குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இக் கள விஜயத்தின் அடுத்து மருத்துவமனை அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.