இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு கல்விகற்கும் 14 வயது சிறுமிக்கும், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிக்கின்றன.
குறித்த மாணவி திருமணம் முடிந்த நிலையில், தாலியை ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு பாடசாலைக்கு வருகைதந்ததை வகுப்பு ஆசிரியர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து ஆசிரியர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியதுடன், கிருஷ்ணகிரியிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் ஆசிரியர்கள் முறைப்பாடு அளித்துள்ளார்.
வீட்டில் விஷேசம் எனக்கூறி மாணவி 3 நாட்கள் திருமணத்திற்கு விடுமுறை பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் திருமணம் செய்த 25 வயது நபர் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.