[புதியவன்]
நடிகர் விஜய், கவுண்டமணி- செந்திலின் வாழைப்பழக் நகைச்சுவையை மீண்டும் உருவாக்கி போலிக் குரலில் நடிக்கும் காணொலி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தை மீள் வெளியீடு செய்ய இருக்கிறார்கள். இந்த விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இராணுவ வீரர் ஜெகதீஷ் என எல்லா விஷயங்களும் சரியாக அமைந்து இந்தப் படம் வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து அழிக்கப்பட்ட காட்சி ஒன்றை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நடிகர்கள் கவுண்டமணி- செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை நடிகர் விஜய் போலிக் குரலில் நடித்து கலாய்த்திருக்கிறார். இந்தக் காணொலியை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்து, ‘மும்பை பொலிஸாரை சந்தோஷப்படுத்த இராணுவ வீரர் ஜெகதீஷ் கவுண்டமணி -செந்தில் நகைச்சுவையை போலிக் குரலில் நடித்திருக்கிறார்’ எனக் கூறி இருக்கிறார்.
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார். செப்டெம்பர் மாதம் வெளியாக இருக்கும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.