கந்தளாய் அக்போபுர மினிப்புற கிராமத்தில் நேற்றைய தினம் இரவு காட்டு யானைகள் உட்புகுந்து பல தென்னை மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் அவசர தேவைக்காகவும் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும்
அப்பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளினால் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருவதாகவும்
அக்கிராமத்திற்கு கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகைத் தருவதில்லையெனவும்
அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த அரசாங்கத்தில் யானை வேலி அமைத்து தருமாறு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர. [ஒ ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.