சொகுசுக் காரில் கஞ்சா உட்படப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யுவதி உட்பட இருவர் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா, 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம். இளவாலையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி மற்றும் இளைஞன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காதலர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசுக்காரில் போதைப்பொருள்களைக் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபரான இளைஞனுக்கு எதிராக 550 கிராம் கஞ்சா உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலும், மற்றைய சந்தேகநபரான யுவதிக்கு எதிராக 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர் இருவரரையும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரினர்.
பிரதான சந்தேகநபரான இளைஞனை மூன்று நாள்கள் பொலிஸ்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதித்தது. மற்றைய சந்தேகநபரான யுவதியை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.