புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் பழுதடைந்த அரிசியை கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைபாட்டின் அடிப்படையில், 22ஆம் திகதி வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன், விசுவமடு பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது திகதி காலாவதியான 700கிலோகிராம் அரிசி, பிஸ்கட் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டது.
குறித்த பிரபல விற்பனை நிலையம் உரிமையாளர்களிற்கு எதிராக இன்று மேலதிக நீதிவான் நீதிமன்றில் வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் மற்றும் புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் ஆகியோரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்குகள் இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன் போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் ரூ.35,000 தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.