காலிமுகத்திடலை அரசியல் நிகழ்வுக்குப் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அந்த வாக்குறுதியை மீறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்று வருகின்றேன். அப்படியிருந்தம் ஊர் முழுதும் என்னைத்தான் ஆளுங்கட்சியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை.
அதேபோல், மே முதலாம் திகதியன்று காலிமுகத்திடலில் பேரணியை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலிமுகத்திடலில் தேர்தல் பரப்புரைகளையோ அல்லது அரசியல் நிகழ்வுகளையோ நடத்துவதில்லை என்று கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தவறானது – என்றார்.
ஜனாதிபதியின் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், சந்திரிக்கா போல் தலை காட்டாமல் இருந்தால் மற்றவர்கள் ஏன் வம்புக்கு வருவார்கள்??????
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.