(ஆதவன்)
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மீண்டும் பெரியம்மை நோய்த் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது என்று கால்நடை வளர்ப்பாளர்களும் பண்ணையாளர்களும் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, கண்டாவளை கால்நடை மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட் டைக்காடு, தர்மபுரம் பகுதியில் பெரி யம்மை நோய்த்தாக்கத்தைத் தீவிரமாக அவதானிக்க முடிகின்றது. கடந்த வருடமும் இந்த நோயால் கால்நடைகள் பெரும் அவதிக்குள்ளான நிலையில் இந்த வருடமும் அந்தத் தொற்று கால்நடைகளிடையே விரைவாகப் பரவி வருகின்றமை பண்ணையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
கால்நடைகளுக்கு, உணவில் நாட்டமின்மை, எழுந்து நடக்க முடியாத நிலை, கொப்பளங்கள் உருவாகி பெரிய காயங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கால்நடை மருத்துவர்களை அணுகி உரிய அறிவுறுத்தல் கள் மற்றும் பராமரிப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.