(புதியவன்)
காஸாவில் வானூர்தியிலிருந்து போடப்பட்ட உணவு பொதிகள் அடங்கிய பரசூட், பாலஸ்தீன மக்கள் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
எனவே உணவு தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் காஸாவுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் வான்வழியாகவும் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று காஸாவின் வடக்குப்பதியில் உள்ள ஷாதியில் பரசூட் மூலம் உணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போது ஒரு பரசூட் விரியாமல் உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்துள்ளது.
இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் உணவுப் பொதிகள் மக்களின் தலையில் விழுந்து பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.