கடந்த 28 .2 .2024 அன்றைய தினம் இந்தியாவின் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தில்லையம்பலம் சுதேந்திராசா (சாந்தன்) அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் சிவப்பு மஞ்சள் வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுமென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி,
இன்று 03.03.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாகவும், முல்லைத்தீவு - மாங்குளம் சந்திப் பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் கிளிநொச்சி வர்த்தக சங்கம் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்- சிவஞானம் சிறிதரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.