யோகி.
பாடசாலை சமூக கரும்பு நடுகை விழா இன்று வெள்ளிக்கிழமை(26) காலை கிளிநொச்சியில் கலைமகள் வித்தியாலய அதிபர் பி.கணேசன் தலைமையில் இடம்பெற்றது.
விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கம் இடம் பெற்றது.
பின்னர் கரும்பு செய்கை நிலத்தில் கரும்பு நாட்டி வைக்கப்பட்டது. குறித்த திட்டத்திற்கு பிரித்தானியாவில் வாழும் மருத்துவ கலாநிதி இ.சதானந்தன் நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க செயலர் றூபவதி கேதீஸ்வரன், அயல் பாடசாலை அதிபர்கள், விவசாயிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.