கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் மற்றும் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த கந்தையா ஆறுமுகம் (வயது – 56) என்பவரே உயிரிழந்தவராவார்.
காரைச் செலுத்திவந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.