வடகீழ் பருவமழை காரணமான வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சவால்களை திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் நளாயினி இன்பராஜ், மேலதிக மாவட்ட செயலர் (காணி) அஜிதா பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன் ,பிரதேச செயலாளர்கள் ,மாவட்ட பிரதம கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிசார், மாவட்டதிலுள்ள அனைத்து திணைக்களங்களின் தலைவர்கள், தொண்டு நிறுவனம் சார்ந்தோர் என பலரும் கலந்து கொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.