புதியவன்.
கடந்த நவம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினடிப்படையில் 57 பவுண் பெறுமதியான தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைவாக கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களான குறித்த தம்பதியினரிடமிருந்து தங்க நகைகள், விலையுயர்ந்த கைதொலைபேசி, ஒருதொகை பணம் , 430மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் மகேந்திரா வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் இது தொடர்பில் உதயநகர் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.