மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளுக்குள் நேற்று புதன்கிழமை அதிகாலை நுழைந்த காட்டுயானைகள் பயன் தரும் மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளன.
இதன் போது கிளிவெட்டி உப தபால் அலுவலக வளாகத்திலிருந்த வாழை, தென்னை மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.அத்துடன் குமாரபுரம் பகுதியில் காணப்பட்ட வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கும் காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.
காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களையும் பயன்தரும் மரங்களுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்ப்பதற்கும் உரிய அரச அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிளிவெட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.