(இனியபாரதி)
நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை(15) நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலுள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகளுடன் பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த " உப்புக் கடலை உரசிய நினைவுகள்"என்ற கவி நூல் வெளியிடப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர், நெடுந்தீவு பங்குத்தந்தை , மத தலைவர்கள் படுகொலையில் உயிழந்தவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
1985ஆம் ஆண்டு இதே போன்ற நாளில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 36 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.