(மாதவன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார மருத்துவமனையின் பயன்பாட்டுக்கான குருதி சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தால் (09) இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மல்லாவி ஆதார மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது.
கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 33 லட்சத்து 67 ஆயிரம் ரூபா செலவில் குருதி சுத்திகரிப்பு இயந்திரம் மல்லாவி ஆதார மருத்துவமனை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மல்லாவி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் வி ஏச் எஸ்.தேஷாஞ்ஜலி மற்றும் யாழ் போதனா மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவ ஆலோசகர் மருத்துவர் பிரம்மா. ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் தலைமை விருந்தினராக , முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்.எம் .உமாஷங்கர் செந்தில்குமரன் நிவாரண நிறுவன நிறுவுனர் டி.செந்தில்குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்
நிகழ்வில் முன்னைநாள் மல்லாவி மருத்துவர்கள், மாவட்ட மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் சமூக சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.