(ஆதவன்)
கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்களுக்கு குழாய்வழி குடிதண்ணீர் விநியோகத்தை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி கிராமங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பெருமளவில் உவராகவும் மாற்றமடைந்துள்ளது. கிணற்றுநீர் உவராகும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையால் அந்தக்கிராம மக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்வதுக்கு நீண் டதூரம் செல்லவேண்டியுள்ளது. வன்னேரிக்குளம் மற்றும் ஆனைவிழுந்தான் ஐயனார்புரம் ஆகிய இரண்டு பாடசாலை மாணவர்களும் குடிதண்ணீர்ப் பிரச்சினையால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்குழாய் வழியிலான குடி தண்ணீர் விநியோகத்தை மேற்படி கிராமங்களுக்கும் வழங்குவதுக்கு உரிய நடவடிக்கையில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொது மக்கள் கோரியுள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.