(புதியவன்)
தலங்கமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாஹேனவில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலங்கமைவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் கடந்த 6 ஆம் திகதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் வாக்குவாதம் எல்லை மீறியதில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் இணைந்து பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் ஹிங்குரக்கொடவைச் சேர்ந்த 31 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெலவை சேர்ந்த 44 வயதுடைய கணவரின் நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்னர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.