எந்தவிதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடையும் நிகழ்வை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கின்றனர்.
அதன்படி, தமிழகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்றிரவு 11.30 மணிவரையில் இந்தக் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் வாய்ப்புள்ளது என இந்திய கடல் தகவல் சேவைகள் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இச் சந்தர்ப்பத்தில் 0.5 மீட்டர் உயரம் வரையில் கடல் அலைகள் உருவாகுவதோடு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும் படகுகள் சேதமடைவதைத் தடுக்க கடலோரங்களில் போதிய இடைவெளியுடன் படகுகளை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.