வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அமர்வுகள் நேற்று நடைபெற்றன. இதன்போது, நடுநிலை வகிப்பது என்ற கொள்கைக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி செயற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தவிசாளர் தெரிவை இரகசியமான வாக்கெடுப்பில் நடத்துவதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பில் நடத்துவதா? என்று உள்ளூராட்சி ஆணையாளர் கேட்ட போது, தேசிய மக்கள் சக்தியினர் ஏனைய சபைகளில் செயற்பட்டதைப் போன்று நடுநிலை வகிக்கவில்லை. மாறாக, சைக்கிள் - சங்குக் கூட்டணியுடனும் இணைந்து இரகசிய வாக்கெடுப்பைக் கோரியது. இதையடுத்தே, அந்தக் கட்சி கரவெட்டி பிரதேசசபையில் நடுநிலையுடன் செயற்படவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.