யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று மாலை 2.15 மணியளவில் புறப்பட்ட ரயில் ஓமந்தைப் பிரதேசத்தில் சுமார் 4.30 மணியளவில் தடம் புரண்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி ரயில் ஓமந்தை பகுதியில் பயணித்தபோது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலும் வந்ததால் அடுத்த தடத்துக்கு மாறியபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இரு ரயில் பெட்டிகள் தடத்தில் இருந்து கீழிறங்கியதுடன், தண்டவாளத்துக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி செல்ல இருந்த பயணிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயிலில் ஏற்றிக் கொழும்புக்கு அனுப்ப ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகளை பஸ்களில் பயணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த தண்டவாளத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை ரயில் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதனால் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.