(இனியபாரதி)
முல்லைத்தீவுக் கடலில் தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்களைப் பயன்படுத்தி பெருமளவான மீன்களை பிடித்துச் சென்ற படகை மீனவர்கள் மடக்கிப் பிடித்து கடற்றொழில் நீரியல்வளப் பணிமனையிடம் ஒப்படைத்துள்ளனர்.
படகிலிருந்து சுமார் 700 கிலோ எடையுள்ள சூடை மீன்கள் ஒளிபாச்சிகள் மற்றும் மின்கலங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கொக்கிளாயில் இருந்து மாத்தளனுக்கு சென்று சட்டவிரோத மீன்பிடி ஊடாக அதிகளவான மீன்களைப் பிடித்து மீண்டும் கொக்குளாய்க்கு திரும்பிய வழியில் இந்த படகை முல்லைத்தீவு மீனவர்கள் மடக்கி பிடித்து கடற்றொழில் நீரியல் வளப் பணிமனையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது கொக்கிளாயை சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளப்பணிமனையினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அதிகரித்துள்ளதுடன் இது தொடர்பில் கடற்படை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.