யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மீன் வளம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிவடையும் பாதகமான நிலை உருவாகுவதால் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது
கடற்படை, இராணுவம், விமானப்படை, பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மூலம் இவ்வாறான தொழில்களை செய்பவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதால் இது குறித்து தத்தமது மீனவர்களுக்கு தெரியப்படுத்துமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியால் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.