புதுக்குடியிருப்பு, மாணிக்கபுரம் கிராமத்தில் நடக்கும் சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்திக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்திய கிராம மக்கள், சில வீடுகளின் கதவுகளில் “உழைத்து வாழப் பழகு, ஊரை அழித்து வாழாதே” என்று சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.
சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்தக்கோரி மாணிக்கபுரம், இளங்கோபுரம், வள்ளுவர்புரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுது்தனர்.
பாதாகைகளை ஏந்தியவாறு கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், சில வீடுகளுக்குச் சென்று கசிப்பு விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததுடன், சில வீடுகளின் முன்பாக சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.
தங்கள் கிராமங்களில் நடக்கும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்ககோரி கிராம அலுவலர் ஊடாகப் பிரதேச செயலருக்கும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் எழுத்துமூல மனு அனுப்பவுள்ளோம் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.