(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி மற்றும் களப்பு மீன்பிடிகளில் சட்டவிரோத மீன்பிடியை தடுத்தல் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் சிறப்புக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தற்போதைய கள நிலமைகளை ஆராயும் பொருட்டு சிறப்பு மீளாய்வுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று புதன் கிழமை பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சட்டவிரோதமாக மீன் பிடிப்பவர்களை கட்டுப்படுத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள பணிமனையின் உதவிப் பணிப்பாளர் கா.மோகனகுமார், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் , மீனவ சங்கம் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.