முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் நேற்றையதினம் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டவர்களின் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட வலைகள் மற்றும் 40000ரூபா பெறுமதியான மீன்கள் மீட்பு
தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு விரிவாக்க உத்தியோகத்தர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை அவர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களின் வலைகள் மற்றும் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளைத்தொடர்ந்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு விரிவாக்க உத்தியோகத்தர் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.