(மாதவன்)
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த இதழான ஞானச்சுடர் 314 ஆவது இதழ் இன்று வெள்ளிக்கிழமை (01/03/2024) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
சந்தியான் ஆச்சிரமம் முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலைமையில் திருமுறை ஓதுதலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதில் வெளியீட்டு உரையினை
யாழ்ப்பாண கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் பெறுவதற்கென அழைக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் நீண்ட தூரம் ஈருருளியில் சென்று கல்வி கற்றுவரும் 5 மாணவர்களுக்கு ஈருருளிகளும் வழங்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்திற்கு மடிக்கணினி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
அதேவேளை ஞானச்சுடர் வாசகர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று வெற்றியாளர் உட்பட. 10 பேருக்கு ஆறுதல் பரிசுகளும். வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
இதில் சந்நிதியான் ஆச்சிரமம் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள். சந்நிதியான ஆச்சிரம நிர்வாகிகள், ஊழியர்கள். பக்தர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.