விளக்கம் கோருகிறார் மாகாணக் கல்விப் பணிப்பாளர்
(ஆதவன்)
முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்துக்கு மாகாணக் கல்விப்பணிமனையால் வழங்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமையால் மீள மாகாணக் கல்வித் பணிமனைக்கு திரும்பியுள்ளது. சம்பத்நுவர பாடசாலையின் உள்ளக வலையமைப்பை உருவாக்க வழங்கப்பட்ட நிதியே மாகாணக் கல்வித் பணிமனைக்குத் திரும்பியுள்ளது.
மீளக்கோரப்படும் போது இந்த நிதி வழங்கப்படும் என்று வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். பாடசாலை உள்ளக வலையமைப்பை உருவாக்குவதற்கான 3 ஆம் கட்ட நிதி முல்லைத்தீவு, சம்பத்நுவர பாடசாலைக்கு வழங்கப்படவில்லை. 4 இலட் சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த நிதி 2023 ஆம் ஆண்டு செப்டொம்பர் மாதம் கல்வி அமைச்சால் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாகாணக் கல்விப் பணிப்பாளரால் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிதி பயன்படுத்தப்படாமை தொடர்பாக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விளக்கம் கோரியுள்ளார். வடக்கு மாகாண தலைமைச் செயலர், வடக்கு ஆளுநர் ஆகியோரும் இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக சம்பத்நுவர பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட போதும், அவர்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்தனர். வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரிடம் இது தொடர்பாக கேட்டறியுமாறு பதிலளித்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.