அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து முன்மொழிவுகளை வழங்குவதற்கு சிறப்பு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளை வழங்குமாறு அரசதலைவர் அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்மொழிவதுக்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அரசதலைவர் ரணில் முன்வைத்துள்ளதுடன், பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சின் செயலர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குறித்த குழுவை விரைவில் நியமிக்குமாறு அரசதலைவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அரசதலைவர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.