இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசப் பொறிமுறை ஊடாகப் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வு, இலங்கை நேரப்படி நேற்று நண்பகல் ஆரம்பமானது. அமர்வின் முதலாவது நாளில், இலங்கையின் விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ட்ரக் தனது வாய்மொழி அறிக்கையை முன்வைத்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது:-
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் காத்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, சர்வதேசப் பொறிமுறை மூலமே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பொறிமுறை தோல்வியடைந்த காரணத்தால் தான், சர்வதேசப் பொறிமுறை ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. எனவே, ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு இணங்க வேண்டும். அத்துடன், போர்க்குற்றங்களுக்காக இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு உறுப்பு நாடுகள் பங்களிப்பை வழங்க வேண்டும் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.