ஆதவன்
பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான, நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழு, இலங்கை தொடர்பான தனது பரஸ்பர மதிப்பீட்டு விசாரணையை 2025 மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த மதிப்பீட்டில் இலங்கையை வெற்றியடையச் செய்வதற்கான பெரும் சவால்மிக்க
நடவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு மும்முரமாக உள்ளது.
இந்தப்பிரிவின் மேலதிகப்பணிப்பாளர் கலாநிதி சுபானி கீர்த்திரத்ன தெரிவித்துள்ளதாவது:-
நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழுவின் இலங்கை மீதான மதிப்பீடுகள் அச்செயலணிக் குழுவுக்கு திருப்தியளிக்காவிட்டால், கறுப்பு அல்லது சாம்பல் நிறப் பட்டியலில் உள்ளடக்கப்படலாம். இத்தகைய பட்டியலில் உள்ளடக்கப்படுவதால் ஏற்படும் இழப்புகள் பாரதூரமானவை.
2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் இலங்கை சாம்பல் பட்டியலுக்கு உட்பட்டிருந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில், மீண்டும் கறுப்பு அல்லது சாம்பல் நிறப்பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை இலங்கை தாங்காது - என்றார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.