[ஆதவன்]
சிங்கள மக்களை ஆளவேண்டும், பௌத்தத்தை ஆள வேண்டும் என்ற சிந்தனை புலிகளிடம் இருந்ததில்லை. அதற்கான நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கவும் இல்லை. தங்களுடைய நிலத்தில் இன, மொழி, கலாசார அடையாளங்களுடன் வாழவேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது. எமது கோரிக்கையும் அதுதான் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தமிழர்களின் இன விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. சில அதிகாரிகளும் இதற்குத் துணை நிற்கின்றனர். வடக்கிலுள்ள காணியை தொல்பொருள் திணைக்களமோ, ஏனைய தரப்புகளோ அபகரிக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி. காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
வடக்கு - கிழக்கில் இருக்கின்ற காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு அக்கறை காட்டவில்லை. காணி அதிகாரம் தொடர்பில் விசேட செயற்றிட்டத்தை காணி அமைச்சு உருவாக்கவேண்டும். எங்களுக்கு சிங்கள, பௌத்த மக்களிடம் எதிர்ப்பு, காழ்ப்புணர்ச்சி இல்லை. எமது நிலத்தில் ஆக்கிரமிப்புகளை நிறுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.